இந்த சம்பவம் குறித்து கதிரவன் ஊரில் போய் சொல்லியுள்ளார். அப்போது இவர் சார்ந்துள்ள சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் துரைப்பாண்டி, குமார் மகன் பகவதிராஜ், செல்வம் மகன் பால்பாண்டி, தங்கவேல் மகன் வேல்முருகன், செல்வம் மகன் முனியாண்டி ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த நந்தக்குமாரை ஆபாசமாகப் பேசி அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இது குறித்து நந்தக்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து துரைப்பாண்டி, பகவதிராஜ், பால்பாண்டி, வேல்முருகன், முனியாண்டி ஆகியோரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நீதிபதி பசும்பொன் சண்முகையா 5 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.