விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த நால்வர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாப் பேசி கொலை மிரட்டல் விடுத்த நால்வரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :13 செப்டம்பர் 2015, 11:49 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாப் பேசி கொலை மிரட்டல் விடுத்த நால்வரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கம்மாப்பட்டி நாடார் உறவின்முறைக்குச் சொந்தமான கலையரங்கம் முன்பு ஆடல் பாடல் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் விமல்ராஜ் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கணேசன் மகன்கள் தீபக், அசோக், குருவையா மகன் காளைச்சாமி, மாரிக்கனி மகன் கார்த்திக்ராஜா ஆகியோர் அருவருப்பான பாடல்களைப் போட்டு ஆடுங்கள் என்று சொல்லியுள்ளார்கள். இதனை காவலர் விமல்ராஜ் கண்டித்துள்ளார். ஆத்திரமுற்ற நால்வரும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசாமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

இது குறித்து விமல்ராஜ், நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சார்பு ஆய்வாளர் வீரணன் வழக்குப் பதிவு செய்து தீபக், அசோக், காளைச்சாமி, கார்த்திக்ராஜா ஆகிய நால்வரையும் கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.