லாரி மோதிய விபத்து: கால்நடை உதவி மருத்துவர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கால்நடை உதவி மருத்துவர் உயிரிழந்தார். மேலும் உடன் வந்த மற்றொரு மருத்துவர் பலத்த காயம் அடைந்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கால்நடை உதவி மருத்துவர் உயிரிழந்தார். மேலும் உடன் வந்த மற்றொரு மருத்துவர் பலத்த காயம் அடைந்தார்.
ராஜபாளையம், ஸ்ரீராம்நகரைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஆனந்தன் (49). இவர் உப்பத்தூர் கால்நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக வேலை செய்து வந்தார். ராஜபாளையம் பொன்னுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராமசுப்பிரமணியன் (42). இவர் நல்லமங்கலம் கால் நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக வேலை செய்து வருகிறார்.
சனிக்கிழமை இரவு கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள பாட்டக்குளத்தில் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தை ஆனந்தன் ஓட்ட, பின்னால் ராமசுப்பிரமணியன் அமர்ந்து ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், வன்னியம்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமசுப்பிரமணியன் பலத்த காயமுற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வன்னியம்பட்டி போலீஸில் ராமசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட லாரியைத் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...