ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மின்னல், இடி: ரயில்வே சிக்னல் பழுது: சிக்னல் கிடைக்காதல் 1 மணி நேரத்திற்கு மேல் ரயில் நிறுத்தம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை பலத்த இடி மின்னலுடன் சற்று நேரம் மழை பெய்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலைய சிக்னல் பழுதானது. இதனால் சிக்னல் கிடைக்காததால் ரயில் சுமார் 1.30 மணி நேரம் நிறுத்தப்பட்டது.









