விருதுநகரில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மனைவியிடம் 5 சவரன் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக ரயில்வே ஊழியர் உள்பட 2 பேரை இன்று போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில் ஊழியர் சுபாஷ்சந்திரபோஸ்(61). இவர் மனைவி ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் சென்னையில் இருந்து முத்துநகர் விரைவு ரயிலில் வந்தார்.
அப்போது ரயில் தண்டவாளம் வழியாக செல்கையில் அப்பகுதியில் 4 பேர் நின்றிருந்தனர். அதில், சரக்கு ரயிலை கடக்க குனிந்து செல்லும் படியும் கூறினார்களாம். குனிந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினார்களாம்.
இது குறித்து விருதுநகர் ரயில்வே போலீஸாரிடம் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக விசாரணை செய்ததில் திண்டுக்கல் ரயில்வே டிரக்மேன் கோமதிநாயகம்(35), விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த சேகர்(45) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 5 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

மயிலாப்பூரில் அமித் ஷா சாலை வலம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

