திருச்செந்தூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் ஏராளமானோர் புனித நீராடி வழிபட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடாந்து கால சந்தி பூஜையாகி, தீர்த்தவாரி நடைபெற்றது.
அதன்பின் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. ஆடிஅமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனிதநீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து சுவாமி தரிசனமும் செய்தனர். இதனால் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.