எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மணிமுத்தாறு மலையில் வைரக்கல் எடுக்க முயற்சி: 7 பேர் கைது

மணிமுத்தாறு மலையில் வைரக்கல் தோண்டி எடுக்க முயன்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 7 பேரை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2016, 4:14 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: மணிமுத்தாறு மலையில் வைரக்கல் தோண்டி எடுக்க முயன்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 7 பேரை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மணிமுத்தாறு மலையில் சிங்கம்பட்டி பீட் எலுமிச்சையாறு சரகத்தில் மர்ம நபர்கள் வைரக்கல் தோண்டி எடுக்க முயற்சிப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனச்சரகர்கள் வெள்ளத்துரை (அம்பை), இளங்கோ (கடையம்) ஆகியோர் தலைமையில் வனத்துறையில் செவ்வாய்க்கிழமை எலுமிச்சையாறு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு 8 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதியில் குழி தோண்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. வனத்துறை அதிகாரிகளை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். வனத்துறையினர் விரட்டி சென்று 7 பேரை பிடித்தனர்.

சிங்கம்பட்டியை சேர்ந்த இசக்கி மகன் சுப்பிரமணியன் (52), மேலப்பாளையத்தை சேர்ந்த அபுல்காசீம் (38), நாமக்கல் மாவட்டம் மங்களாபுரத்தை சேர்ந்தவர் காசி மகன் செல்வகுமார் (30), இதேப் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் சுப்பிரமணியன் (34), நாமக்கல் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கோவிந்தன் (37),

இதேப் பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் முருகன் (55), பெருமாள் மகன் ரவி (25) ஆகியோர், சிங்கம்பட்டியை சேர்ந்த சுடலைமுத்து என்பவருடன் சேர்ந்த வைரக்கல் எடுக்க முயன்றது தெரியவந்தது.

இதில் 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பிச் சென்ற சிங்கம்பட்டியை சேர்ந்த சுடலைமுத்துவை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 7 பேர்களை அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

வனத்துறை பணியாளர்கள் இருவரின் உதவியுடன் இந்த கும்பல் புலிகள் காப்பக வனப்பகுதியில் வைரக்கல் தோண்டி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.