பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலியில் வழிப்பறிக்கு முயன்ற மூவர் கைது

நெய்வேலி நகரிய உதவி ஆய்வாளர் பாரதி மற்றும் போலீசார் நேற்றிரவு ஏழுடையான்பட்டு கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2016, 5:30 am

சீனிவாசன்

பண்ருட்டி: நெய்வேலி நகரிய உதவி ஆய்வாளர் பாரதி மற்றும் போலீசார் நேற்றிரவு ஏழுடையான்பட்டு கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகையில் நால்வரும் தப்பி ஓட முயன்றனர். இவர்களில், தனவேல் 32, சுப்பிரமணியன் 25, ராஜதுரை செல்வகணபதி, கோபி ஆகிய நான்கு பேரை போலீசார் பிடித்தனர். இதில் கோபி என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்டவர்களின் விசாரணை நடத்துகையில் வழக்கு செலவிற்காக அவ்வழியில் நகை அணிந்து வருபவர்களிடம் கொள்ளையடிக்க திட்டம் இருந்ததாகத் தெரிவித்தனர். இதைதொடர்ந்து மூவரையும் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய கோபியை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.