தீர்மான நகலை வாங்கி ஜெயலலிதா படம் முன்பு வைத்து கண் கலங்கிய சசிகலா
அதிமுக பொதுச்செயலராக தன்னைத் தேர்வு செய்ததற்கான தீர்மான நகலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து பெற்ற சசிகலா, அதனை ஜெயலலிதா படத்தின் முன் வைத்து கண் கலங்கினார்.


சென்னை: அதிமுக பொதுச்செயலராக தன்னைத் தேர்வு செய்ததற்கான தீர்மான நகலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து பெற்ற சசிகலா, அதனை ஜெயலலிதா படத்தின் முன் வைத்து கண் கலங்கினார்.
அதிமுக பொதுச் செயலராக வி.கே. சசிகலாவை தேர்வு செய்து, பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மான நகலை, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட மூத்த நிர்வாகிகள் பலரும், வானகரத்தில் இருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்று, சசிகலாவை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
அந்த நகலை பெற்றுக் கொண்ட சசிகலா, அதனை ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தின் முன் வைத்து கண் கலங்கினார்.
இவை அனைத்தும் போயஸ் தோட்ட இல்லத்தின் வாயிலில் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...