சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் விவேக்

தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவின் மகன் விவேக், வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்.

News image
Updated On :30 டிசம்பர் 2016, 10:33 am

DIN


சென்னை: தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவின் மகன் விவேக், வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்.

ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், விவேக் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகியுள்ளார் விவேக்.

வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவில் இருந்து விவேக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டியவர், ஒரு வாரம் காலம் தாழ்த்தி இன்று ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.