இதனையடுத்து மத்திய ஆராய்ச்சிக் குழு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் குழு கலசலிங்கம்க பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து, பேராசிரியரின் ஆராய்ச்சியையும், ஆராய்ச்சிக் கூடங்களையும், சர்வதேச ஆராய்ச்சி மையத்தையும் பார்வையிட்டது. பின்னர் இது குறித்த அறிக்கையின் பேரில் புதிய பரிசோதனைக் கருவிகளும், புதிய துகள்களை ஆராய்ச்சி செய்வதற்கான கருவிகளையும், உற்பத்தி செய்தவற்கான கருவிகளையும் வெளிநாடுகளிலிருந்து தருவித்து பயன்படுத்துவதற்காக ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சகம் ஆணை அனுப்பியுள்ளது.