ஆனால் கருப்பழகு தனது மகனை, ராஜபாளையம், சம்மந்தபுத்தில் மருத்துவர் சி.கனகராஜ் என்பவர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு 26.6.2011-ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர் கனகராஜ், 27-ம் தேதி காலை சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ரூ.35 ஆயிரம் செலவாகும் என்று கூறி பணத்தைப் பெற்றுள்ளார். எந்த காரணத்திற்காக அறுவை சிகிச்சை என்று கேட்டதற்கு பதில் கூறாமலும், பெற்றோரின் ஒப்புதல் பெறாமலும் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றதாம். அறுவை சிகிச்சை அறையிலிருந்து வரும்போதே பாலமுருகன் சுய நினைவு இல்லாத நிலையில் வந்துள்ளார். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. மருத்துவரிடம் முறையிட்டபோது, அவர் ரத்தம் ஏற்ற வேண்டும். ரத்த வங்கிக்கு போன் செய்து கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் சற்று நேரத்தில் பாலமுருகன் உயிரிழந்துவிட்டாராம்.