எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குண்டாறு அணை நிரம்பியது: கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய பிறகு குண்டாறு அணை செவ்வாய்க்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2016, 11:26 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய பிறகு குண்டாறு அணை செவ்வாய்க்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி குண்டாறு அணையில் 11 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 13 மி.மீ மழையும், செங்கோட்டையில் 2 மி.மீ மழையும், ஆலங்குளத்தில் 1.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து இருந்து வருவதால் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1528.59 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி, கடனாநதி அணைக்கு 145 கனஅடி, ராமநதி அணைக்கு 57 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 29 கனஅடி, கருப்பாநதி மற்றும் கொடுமுடியாறு அணைகளுக்கு தலா 5 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

முதல் அணை: நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்த மழைக்கு 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 14 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 3 கனஅடி திறந்து விடப்பட்டது.

இம்மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய பிறகு முதலாவதாக குண்டாறு அணை நிரம்பியுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 80.15 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம 1.18 அடி உயர்ந்து 93.11 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 71 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 61 அடி,

ராமநதி அணையின் நீர்மட்டம் 66 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 26.52 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 71 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 20.45 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.30 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் இருந்தது.

பாசனத் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 1054.75 அடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 75 கனஅடி, கடனாநதி அணையில் 80 அடி, ராமநதி அணையில் 40 அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.