திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே செயல்படும் மீன் அரவை ஆலையினை நிலத்தடி நீர் சுவை மாறுகிறது. விவசாயம் அழிந்து வருவதாக புகார் தெரிவித்து குறை தீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
ராதாபுரம் வட்டம், வள்ளியூர் ஒன்றியம், இருக்கன்துறை ஊராட்சியில் 4 தனியார் மீன் அரவை ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை கிணறுகளில் தேக்கி வைத்து பின்னர் வெளியேற்றப்படுகிறது.
கழிவுகளிலிருந்து வெளியாகும் ஒரு வித நச்சு வாயு, நச்சு கழிவுகள் அப்பகுதியில்
வசிக்கும் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் குளம், நீர்நிலைகளில் கலப்பதால் நிலத்தடி நீர் ஆதாரம் மாசுபட்டு வருகிறது.