கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தொழில்நுட்பக் கோளாறு: ஜெட்டா புறப்பட்ட சௌதி விமானம் சென்னையில் தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சௌதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Updated On :19 ஜூலை 2016, 10:12 am

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சௌதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

258 பயணிகளுடன், இன்று முற்பகல் 11.40 மணியளவில் ஜெட்டா நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

12.10 மணியளவில் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.