எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லையில் அரசுப் பேருந்து மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் சாவு

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.

News image
Updated On :27 ஜூலை 2016, 8:54 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் தேசிய நெடுஞ்சாலைக் குடியிருப்பு நோபுள் தெருவை சேர்ந்தவர் சந்தானம் மகன் முத்துக்குமார் (61). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணி செய்து வந்தார்.

முத்துக்குமார் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலி தெற்குபுறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சிவகிரியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

புறவழிச்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.