எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 6 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2016, 9:38 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.

நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்யாததால் எதிர்பார்த்தவாறு அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. அணைகளின் தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு கார் சாகுபடி முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே 2 நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது.  வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்) பாபநாசம் அணை-41, பாபநாசம் கீழ் அணை-2, சேர்வலாறு அணை-6, மணிமுத்தாறு அணை-6.2, கடனாநதி அணை-6, ராமநதி அணை-5, கருப்பாநதி அணை-1, குண்டாறு அணை-29, அடவிநயினார் அணை-7, கொடுமுடியாறு அணை-25, கன்னடியன் அணைக்கட்டு-1.4, அம்பாசமுத்திரம்-1, தென்காசி-3, செங்கோட்டை-5, நான்குனேரி-4.5, களக்காடு- 36.2, மூலக்கரைப்பட்டி-3, பாளையங்கோட்டை-2 திருநெல்வேலி-7.5.

மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைகளின்  நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1683.91 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 540 கனஅடி, கடனாநதி அணைக்கு 157 கனஅடி, ராமநதி அணைக்கு 40 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 43 கனஅடி, குண்டாறு அணைக்கு 16 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 41 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 72.90 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 6.56 அடி உயர்ந்து 85.56 அடி,  மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 68.88 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்து 59.90 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 63 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 24.77 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 70.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 17.85 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.04 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் இருந்தது.

விவசாயம், குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 1054.75 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 75 கனஅடி, கடனாநதி அணையிலிருந்து 80 கனஅடி, ராமநதி அணையிலிருந்து 40 கனஅடி, அடவிநயினார் அணையிலிருந்து 25 கனஅடி, குண்டாறு அணையிலிருந்து உபரிநீர் 16 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.