ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது

News image
Updated On :4 மார்ச் 2016, 3:54 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து மிரட்டிய நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீலங்கா, வவுனியா மாவட்டம், பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் விஜயசேகர் மனைவி தியாழினி (30). இவருக்கு ரிஜினா (12), டேனியல் (10) என்ற இரு பிள்ளைகள் உண்டு. 2007-ம் ஆண்டு இலங்கையிலிருந்து அகதியாய் குடும்பத்துடன் வந்து மொட்டமலை அகதிகள் முகாமில் குடியிருந்து வருகிறார். கணவர் விஜயசேகர் 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு வேலைக்காக சென்றுவிட்டார்.

யாழ்பாணம், எஸ்ராதி வீதியைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் ஜெனீஸ்டன் (32) என்பவரும் இலங்கையிலிருந்து அகதியாய் வந்து மொட்டமலை முகாமில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் தியாழினிக்கும் ஜெனீஸ்டனுக்கும் சில ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. தியாழினி குடும்பத்துடன் இலங்கைக்கு செல்ல இருப்பதாகக் கூறி வந்துள்ளார். இதற்கு ஜெனீஸ்டன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

புதன்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்த ஜெனீஸ்டன், தியாழினியை ஆபாசமாகப் பேசி கத்தியைக் காட்டி மிரட்டி இலங்கைக்கு செல்லக் கூடாது என்று தகராறு செய்துள்ளார்.

இது குறித்து தியாழினி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெனீஸ்டனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.