மார்ச் 11-ம் தேதி கல்லூரியில் 1 மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு, வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள கணவர் வீட்டிற்கு கல்பனா வந்துள்ளார். இவருடன் கல்பனாவின் அண்ணன் மனைவி ஜெபா (37) என்பவரும், அக்காள் மகன் சக்தி மகாராஜவும் இருந்துள்ளார்கள். மூவரும் புதன்கிழமை காலை தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் டாக்டர் ஜெகநாத்பிரபு இவரது அண்ணன் சுரேஷ், தாய் சீனியம்மாள் ஆகியோர் அத்துமீறி நுழைந்து, கல்பனாவை ஆபாசமாகப் பேசி கட்டையால் அடித்து கீழே தள்ளியுள்ளார்கள். தடுத்த ஜெபாவிற்கும் அடி விழுந்துள்ளது. காயமுற்ற இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.