காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ஸ்டேஷ்னரி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
அவ்வழியாக வந்த கார், லாரி மீது மோதியதில், காரில் வந்த 3 பேர் பலியாகினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மிகவும் இருட்டான பகுதியில், எந்த சமிக்ஞையும் இல்லாமல் லாரி நிறுத்தப்பட்டிருந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.