இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அரசு அறிக்கை: உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு!

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும்... 

News image
Updated On :3 அக்டோபர் 2016, 11:22 am

DIN

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் பிரபல சமூக நல  ஆர்வலர் 'ட்ராபிக்' ராமசாமி. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல  மனு ஒன்றைத  தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழக முதலவர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல்நிலை குறித்த பலவித வதந்திகள் வெளியே பரப்பப்படுகின்றன.  அவரது உடல்நிலை குறித்து அறிய தமிழக மக்கள் மிகவும் ஆவலாக  உள்ளனர்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியயோர் அவரை சந்தித்து விட்டு சென்றுள்ளனர். அனால் அவர்கள் யாரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை  வெளியிடவில்லை.

எனவே தமிழக அரசனது அவரது உடல்நலம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் அமைச்சரவை சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவர் நடத்தியதாக கூறப்படம் ஆலோசனைகள் பற்றிய புகைப்படங்களையும் வெளியிட வேண்டும்.

மேலும் அப்போலோ மருத்துமனையினை சுற்றியுள்ள சாலைகளில் காவல்துறை செயற்கையான தடுப்புகளை உண்டாக்கி, அதன் மூலம் பிற நோயாளிகள்  மருத்துவமனையை அணுகுவதில் சிரமங்களை உண்டாகி வருகிறது.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுவானது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.