சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உருக்குத் துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்தர் சிங்குக்கும் திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், பொதுத் துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.
தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் சேலம் உருக்காலையை தனியாருக்கு மாற்றக் கூடாது.
தமிழகத்தின் அடையாளமாக விளங்கும் சேது கால்வாய் திட்டம் மற்றும் சேலம் உருக்காலை, தமிழர்களின் கனவுத் திட்டம் என்றும் கருணாநிதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய உருக்குத் துறை அமைச்சர் சவுத்ரி வீரேந்தர் சிங்குக்கும் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


