பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

என்.எல்.சி தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற ஆற்றுப்பாசன விவசாயிகள் 200 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்ககோரியும், என்.எல்.சி.,யில் உற்பத்தி செய்யும்....

News image
Updated On :20 அக்டோபர் 2016, 7:25 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

பண்ருட்டி: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்ககோரியும், என்.எல்.சி.,யில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் கர்நாடக மாநிலத்துக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் என்.எல்.சி இந்தியா நிறுவன தலைமையகத்தை முற்றுகையிட முயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெய்வேலி ஆர்ச் கேட் அருகே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், அங்கிருந்து மாநில தலைவர் கூ.விஸ்வநாதன் தலைமையில் பேரணியாக என்.எல்.சி இந்தியா தலைமையகத்தை நோக்கி வந்தனர். செக் போஸ்ட் அருகே வந்த இவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பின்னர், காவல் துறையினரை கண்டித்தும், சாலையில் படுத்தும் கோஷங்களை எழுப்பினர். கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெய்வேலி வட்டம் 8-ல் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.