சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மணமான 2 மாதத்திலேயே புதுமணப்பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை

மணப்பாறையில் திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் புதுமணப்பெண் ஒருவர் மர்மமாற முறையில் தற்கொலை செய்துகொண்டார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2016, 12:56 pm

ஆர். எஸ். கார்த்திகேயன்

மணப்பாறையில் திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலையில் புதுமணப்பெண் ஒருவர் மர்மமாற முறையில் தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி அருகேயுள்ள பாம்பாட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவபாலன். தையற்கலைஞர். இவருக்கும் தவளைவீரன்பட்டியைச் சேர்ந்த பூவரசி(20), என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த பூவரசி தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.

ஆனால் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை சுப்பிரமணி போலீஸில் புகார் செய்துள்ளார், அதன்பேரில், வையம்பட்டி போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ( ஆர்.டி.ஓ.) ராஜராஜன் தனிவிசாரணை மேற்கொண்டு வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.