பரமக்குடி: பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
சிவகங்கை மாவட்டம், பெரும்பாளை கிராமத்தை சேர்ந்தவர் துரை சிங்கம்(65),இவருடைய மனைவி காளிமுத்து. தம்பதிகளான இவர்கள் சத்திரக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் திரும்பினர்.
இந்நிலையில் இவர்கள் முத்துவயல் விலக்கு சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் திடீரென இருசக்கரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.