

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தனக்கு குறைவான வார்டுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதுஅவர் கூறியதாவது:
திமுக வெளியிட்டுள்ள பட்டியலில் மூன்று மாநகராட்சிகளில் காங்கிரசுக்கு மிகவும் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தலைவர்கள் அளவில் பேசி முடிவு செய்யயப்பட்ட இடங்களே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
கூடுதல் இடங்களைப்பெற திமுகவுடன் பேச்சுவார்தை நடத்தப்பட்டு வருகிறது. அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.