ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உள்ளாட்சித் தேர்தல்: அக்.1-க்குள் "பூத் சிலிப்' அச்சிட உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2016, 8:27 pm

DIN

உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல், உள்ளாட்சித் தேர்தலுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. வார்டுகள், தெருக்கள் உள்ளிட்ட விவரங்களுடன் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதனை கடந்த 19-ஆம் தேதிக்குள் வெளியிட அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி, பிரதான வாக்காளர் பட்டியல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தப் பட்டியல்: பிரதான வாக்காளர் பட்டியலுடன், திருத்தப் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பட்டியலை வரும் 26-ஆம் தேதிக்குள் தயார் செய்ய மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் மாற்றங்கள், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரையில் சேர்த்து வெளியிடப்படும்.
வாக்குச்சாவடி சீட்டுகள் ("பூத் சிலிப்'): உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன்படி, வாக்குச்சாவடி சீட்டுகளை அச்சிடும் பணியை வரும் 27-இல் தொடங்கி, அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்கவும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.