காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: புழல் சிறையில் அடைப்பு!

புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் ...

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 10:22 am

தினமணி

சென்னை: புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பபித்துள்ளது.

2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் தான் பிணையில் செல்ல விரும்பவில்லை என்று அவர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.