மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அண்ணா சாலையில் மாணவர்கள் 'திடீர்' போராட்டம்! 

தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அண்ணா சாலையில் ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:12 pm

DIN

சென்னை: தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அண்ணா சாலையில் அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தினைச் சேர்ந்த மாணவர்கள் 'திடீர்' போராட்டம் நடத்தி கைதானார்கள்.

வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் அமைப்பினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அநத வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் சிக்னல் அருகே அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தினைச் சேர்ந்த மாணவர்கள் இன்று காலை 'திடீர்' போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய கூடத்தில் இருக்க வைத்தனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக அண்ணா சாலையியில் சில மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.