மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆர்.கே. நகரில் நாளை காவல்துறை கொடி அணிவகுப்பு: காவல் ஆணையர் கரண் சின்ஹா

ஆர்.கே. நகரில் நாளை காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் கரண் சின்ஹா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 11:01 am

தினமணி

ஆர்.கே. நகரில் நாளை காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் கரண் சின்ஹா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்.கே. நகரில் நாளை காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்படும். தேர்தல் சிறப்பு பார்வையாளர் மனோஜ் அகர்வால் நாளை சென்னை வருகிறார். தேர்தலின் போது ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். ஆர்.கே. நகரில் பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 694 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக (அம்மா) கட்சியின் சார்பில் டி.டி.வி. தினகரன், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் இ.மதுசூதனன், பாஜக சார்பில் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்பட மொத்தம் 62 பேர் களத்தில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.