மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புழல் சிறையில் மவுன விரதம் மேற்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வைகோ இன்று தனது தந்தை வையாபுரியின் நினைவு நாளையொட்டி சிறையிலேயே மவுன விரதம் கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.
வைகோவின் தந்தை வையாபுரி கடந்த 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மறைந்தார். அதுமுதல் வைகோ கடந்த 44 ஆண்டுகளாக ஏப்ரல் 5ஆம் தேதி தவறாமல் மவுன விரதம் கடைபித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நாளில் வைகோ, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர்கூட குடிக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


