டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேர வருமானவரி சோதனை நிறைவு: சோதனையில் எதுவும் சிக்கவில்லை என அமைச்சர் பேட்டி

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேரமாக நடந்த வருமானவரி சோதனை இன்று காலை 4 மணியளவில் நிறைவு பெற்றது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:14 pm

DIN

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேரமாக நடந்த வருமானவரி சோதனை இன்று காலை 4 மணியளவில் நிறைவு பெற்றது. அரசியல் உள்நோக்கம் காரணமாகவே வருமானவரி சோதனை நடைபெற்றது என சோதனைக்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின், சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லம் உட்பட, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்.7) காலை, 6.00 மணியளவில், அதிரடி சோதனையை துவக்கினர். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை துவங்கி 22 மணி நேரமாக நடைபெற்ற சோதனை, இன்று சனிக்கிழமை அதிகாலை (ஏப்.8) 4 மணி அளவில் நிறைவு பெற்றது.

சோதனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது: எனது வீடு மற்றும் எனது சகோதரர் வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. எனது சொந்த ஊர் ளற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையிலும் எதுவும் சிக்கவில்லை. சரத்குமாரை தாம் சந்தித்ததைத் தொடர்ந்து என் வீட்டிலும், சரத்குமார் வீட்டிலும் நடந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்தேன். ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நடந்தே சோதனை இது என்று கூறினார்.

சோதனையில் குறிப்பிடும்படியான பணமோ, கைப்பற்றப்படவில்லை. எனது உதவியாளர் நைனார் என்பவர் வீட்டில் ரூ.2 கோடிக்கு மேல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அறிந்தேன். அப்படியொரு பெயர் கொண்ட நபர் எனக்கு உதவியாளராக இல்லை. அவருக்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.