மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விவசாயிகளுடன் மண்சோறு சாப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த்!

புதுதில்லியில் கடந்த 28 நாட்களுக்கும் மேலாக போராட்டடத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளைச்  சந்தித்த தேமுதிக மகளிர் அணித் தலைவியான பிரேமலதா ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:16 pm

DIN

புதுதில்லி: புதுதில்லியில் கடந்த 28 நாட்களுக்கும் மேலாக போராட்டடத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளைச்  சந்தித்த தேமுதிக மகளிர் அணித் தலைவியான பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளுடன் மண்சோறு சாப்பிட்டார்.

வறட்சி நிவாரணம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் கடந்த 28 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்களில் சிலர் தங்களை சந்திக்க மறுத்த பிரதமர் மோடியைக் கண்டித்து, முழு நிர்வாண போராட்டடத்தில் கூட ஈடுபட்டனர். இது தமிழகம் முழுவது அதிர்ச்சியலைகளை உஉண்டாக்கியது.

இந்நிலையில் தேமுதிக மகளிர் அணி தலைவியான பிரேமலதா விஜயகாந்த் இன்று தில்லியில் போராட்டடத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.மேலும் அவர் விவசாயிகளுடன் அமர்ந்து அவர் மண்சோறு சாப்பிட்டார். அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

விவசாயிகள் தங்கள் நியாயமான உணர்வுகளை தெரியப்படுத்தவே போராட்டம் நடத்துகின்றனர். அவர்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணபபட வேண்டும். பிரதமர் அனைவருக்கும் பொதுவானவர். அவர் இந்த பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காண உதவ வேண்டும். நேற்று நடந்த நிர்வாண போராட்டமானது நிச்சயமாக தமிழர்களுக்கு தலைகுனிவுதான். இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு ஏற்பட வேண்டும்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. சரியான நிர்வாகம் இல்லை தமிழகத்தில் உள்ள அணைகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. அவைகளைத் தூர்வார இதுவே சரியான தருணம். நாட்டில் விவசாயம் இல்லாவிட்டால் வளர்ச்சி எப்படி ஏற்படும்? எனவே விவசாயிகளின் பிரச்சினைங்களை தீர்க்க மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.