ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை: வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு
ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


சென்னை: ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.
அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த, ஓபிஎஸ் அணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று ஓபிஎஸ் அணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், பழனிசாமி அணி தரப்பில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம், தங்கமணி, வீரமணி, வேலுமணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...