

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் அவருடைய இல்லத்தில் இன்று மாலை சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் அவருடைய இல்லத்தில் இன்று மாலை சந்தித்து பேசினார்.சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்தவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடக்கவிருக்கும் என்னுடைய மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ரஜினியை சந்தித்தேன். என்னிடம் அவர் தமிழக அரசியல் நிலவரம், பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் இதர விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.