சென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ.தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பபடிவம் விற்றதில் பல கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளதாக நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராம் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து பணம் வசூலிப்பதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.