டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரும்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி 4 ஆண்டுகள் தொடரும் என்று என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:21 pm

DIN

திண்டுக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி 4 ஆண்டுகள் தொடரும் என்று என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.50.29 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் சி.சீனிவாசன் வழங்கினார்.
30 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.57,800 மதிப்பீட்டிலான மாற்றி வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ.17,34,000 மதிப்பீட்டிலும், திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.4.38 லட்சம் மதிப்பில் தங்கம், நிதியுதவியாக ரூ.13 லட்சம் வழங்கப்பட்டது.
 மேலும் வருவாய்த்துறை சார்பில் 48 பயனாளிகளுக்கு ரூ.6.25 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட மொத்தம் 212 பயனாளிகளுக்கு ரூ.50.29 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுன.

விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியால் இந்த ஆட்சி 10 மாதத்தை கடந்து நல்லாட்சி நடந்து வருகிறது. இது போன்ற திட்டங்கள் அனைத்தும் 4 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றித் தரப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதிபடி 100 க்கு 100 சதவீதம் நலத்திட்ட உதவிகள் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும்.

122 எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அவரது தலைமையிலான ஆட்சி தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு நீடிக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல் உதவியாளர் பணிக்கு நேரடியாக தேர்வு நடந்து வருகிறது. இந்த பணியில் சேர யாரும் பணம் கொடுக்க வேண்டாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை தீர்க்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசு உத்தரவுப்படி குடிநீர் பிரச்சினையை தீர்க்க வழிவகை செய்வார்கள் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.