சென்னை: அரசின் புதிய பென்சன் கொள்கை அறிவிப்பை எதிர்த்து நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாக தமிழக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தின் பொழுது சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் உண்டாகும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நாங்கள் அதற்கு அப்பொழுதே எதிர்ப்பு தெரிவித்தோம்.
மேலும் குறிப்பிட்ட சில துறைகளை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்கும் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் கால வரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட போகிறோம். இந்த போராட்டம் காரணமாக தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடு பாதிக்கபப்டும். அத்துடன் கோடிக்கணக்கான அளவில் வருவாய் இழப்பும் உண்டாகும்.
இந்த போராட்டத்தை இனி வரும் காலங்களில் மாவட்ட அளவில் பல்வேறு வடிவங்களில் விரிவுபடுத்த உள்ளோம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


