சென்னை: அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கான உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை குறித்து குழப்பமான நிலை நிலவி வரும் வேளையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது க்ரீன்வேஸ் சாலை இல்லத்தில் இணைப்பு பேச்சுவார்தைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகான உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே இரு அணிகளும் இந்த நல்ல சூழலில் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.