மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நியூட்ரினோ திட்டம்: கேரள அரசு தடையில்லாச் சான்று வழங்கக் கூடாது

நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசு தடையில்லாச் சான்று வழங்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2017, 8:05 pm

DIN

நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசு தடையில்லாச் சான்று வழங்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புழல் சிறையில் இருந்தபடி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்: தேனி மாவட்டத்தில், கேரள எல்லைக்கு அருகில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூடம், இடுக்கி, முல்லைப் பெரியாறு ஆகிய இரண்டு அணைகளுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பல நீராதாரங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும். கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தத் திட்டத்தைத் தொடக்கத்தில் இருந்து எதிர்த்தார்.
இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், திட்டத்தைச் செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட அரிய காட்டு விலங்குகள் வசிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைப்பதற்குக் கேரள அரசின் தடை இல்லாச் சான்றிதழைப் பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை, உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நியூட்ரினோ திட்டம் அமைப்பதற்கு கேரள அரசின் வனத் துறை தடை இல்லாச் சான்றிதழ் வழங்குவதைத் தாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.