மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: கொலையாளி கைது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்தி வந்த கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்த ஓம் பகதூர் (50)

News image
Updated On :26 ஏப்ரல் 2017, 5:19 am

DIN

நீலகிரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்தி வந்த கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்த ஓம் பகதூர் (50) கடந்த திங்கள்கிழமை (ஏப் 23) படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இவர் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.  

இந்நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதனிடையே காவலாளி கிருஷ்ண பகதூரை கோத்தகிரி காவல் நிலையத்துக்கு வரவழைத்து செவ்வாய்க்கிழமை காலை முதல் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், ஓம் பகதூர், கிருஷ்ண பகதூரின் மாயமான 2 செல்லிடப்பேசிகளைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து 8-ஆம் எண் நுழைவு வாயில் அருகே செல்லிடப்பேசி சிக்னல் கிடைப்பதால், அப்பகுதியில் செல்லிடப்பேசிகளை கொலையாளிகள் வீசியோ, புதைத்தோ சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேடும் பணி நடைபெற்று வந்தது.

இப்பணியில் சைபர் கிரைம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த செல்லிடப்பேசிகள் கிடைத்தால் குற்றவாளிகளை அடையாளம் காண்பது எளிதாகிவிடும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொடநாடு  எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலையில், உடன் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர்தான் குற்றவாளி என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

காவலாளி கிருஷ்ண பகதூர், கையுறை அணிந்துகொண்டு கொலை செய்துள்ளார் என்பதும் பிறகு, கையுறையைத் தீயிட்டு எரித்துள்ளார். இதில், கையுறையின் ஒரு விரல் மற்றும் எரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த தடயத்தை வைத்து காவல்துறையினர் ஆய்வுசெய்ததில் கிருஷ்ண பகதூரின் கைரேகையுடன் பொருந்தியது. எனவே, கிருஷ்ண பகதூர்தான் கொலைக் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.