விவசாயிகளைப் பற்றி பேச திமுகவுக்குத் தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தேச துரோக வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீதிமன்ற காவல் வியாழக்கிழமையுடன் (ஏப்.27) முடிவடைந்தது. இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வைகோவின் காவலை ஜூன் 2 -ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திமுகவுக்கு தகுதி இல்லை: அதனைத் தொடர்ந்து போலீஸார் மீண்டும் அவரை சிறைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் வாகனத்தில் புறப்படும்போது வைகோ அளித்த பேட்டி:
தில்லியில் 40 நாள்களுக்கும் மேலாகப் போராடிய விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுத்தது கண்டனத்துக்குரியது.
இன்றைக்கு விவசாயிகளின் நண்பனாக தன்னை காட்டிக்கொள்கிறது திமுக. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என 2007 -இல் தீர்ப்பு வந்தபோது, அதை வெளியிடவோ அல்லது மேலாண்மை வாரியம் அமைக்கவோ திமுக முயற்சிக்கவில்லை.
அதேபோல், நதிநீர் இணைப்புக்கான தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் நான் கொண்டு வந்தபோது, இந்திய அளவில் அதை எதிர்த்த ஒரே கட்சி திமுக மட்டுமே.
எனவே விவசாயிகளைப் பற்றியோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தோ, நதிநீர் இணைப்பு குறித்தோ பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று வைகோ கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


