தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'விவசாயிகளைப் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை'

விவசாயிகளைப் பற்றி பேச திமுகவுக்குத் தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:23 pm

DIN

விவசாயிகளைப் பற்றி பேச திமுகவுக்குத் தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தேச துரோக வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீதிமன்ற காவல் வியாழக்கிழமையுடன் (ஏப்.27) முடிவடைந்தது. இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வைகோவின் காவலை ஜூன் 2 -ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திமுகவுக்கு தகுதி இல்லை: அதனைத் தொடர்ந்து போலீஸார் மீண்டும் அவரை சிறைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் வாகனத்தில் புறப்படும்போது வைகோ அளித்த பேட்டி:
தில்லியில் 40 நாள்களுக்கும் மேலாகப் போராடிய விவசாயிகளை பிரதமர் சந்திக்க மறுத்தது கண்டனத்துக்குரியது.
இன்றைக்கு விவசாயிகளின் நண்பனாக தன்னை காட்டிக்கொள்கிறது திமுக. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என 2007 -இல் தீர்ப்பு வந்தபோது, அதை வெளியிடவோ அல்லது மேலாண்மை வாரியம் அமைக்கவோ திமுக முயற்சிக்கவில்லை.
அதேபோல், நதிநீர் இணைப்புக்கான தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் நான் கொண்டு வந்தபோது, இந்திய அளவில் அதை எதிர்த்த ஒரே கட்சி திமுக மட்டுமே.
எனவே விவசாயிகளைப் பற்றியோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தோ, நதிநீர் இணைப்பு குறித்தோ பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.