மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2017, 1:01 pm

DIN

சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகமெங்கும் பரவலாக காணப்படும் சீமைக்கருவேல மரங்களின் காரணமாக நிலத்தடிநீர் குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில், மாநிலம் முழுதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுமாறு சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.   

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை  ஈடுபட்டு அதுதொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர் மாநிலம் முழுதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதன் காரணமாக ஏற்படும் சுற்றுச் சூழல் மற்றும் இதர பாதிப்புகள் குறித்து எந்த விதமான ஆய்வுகளும் செய்யபடவில்லை. அதே நேரத்தில் அகற்றப்படும் மரங்களுக்கு ஈடாக பசுமை வளம் காக்க மரங்களும் நடப்படுவதில்லை. எனவே இது தொடர்பாக சென்னை ஐ.ஜ.டி குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவினை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற  தலைமைநீதிபதி தலைமையிலான அமர்வு தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை ஐஐடி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்ட நீதிமன்றம், வழக்கினை மே மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்த வைத்து உத்தரவிட்டது. அதனுடன் இந்தவழக்கினை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.