கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

News image
Updated On :29 ஏப்ரல் 2017, 3:10 am

நாகர்கோவில்: ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

நாகர்கோவிலில் அவர் செய்தியாளரப்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது மாநில அரசு. கழகங்களின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கிறது.

தமிழகத்தை இந்த நிலைக்கு ஆக்கியதில் திமுகவுக்கு முக்கியப் பங்கு உண்டு. விவசாயிகள் விவகாரத்தில் உண்மையான நிலையை கொடுத்தால் என்ன செய்ய வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்யும்.

தேசிய நெடுஞ்சாலையில் ஹிந்தி எழுதும் திட்டத்தை திமுக. கொண்டுவந்தது என நான் ஆதாரபூர்வமாக காட்டிவிட்டேன். ஹிந்தியை எதிர்க்கும் திமுக அதற்கு ஆதாரபூர்வமாக பதில் சொல்லத் தயாரா? ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

1967 இல் மொழியை சொல்லித்தான் திமுக.வினர் ஆட்சிக்கு வந்தார்கள். கடந்த ஆட்சியில் 13 தமிழ் அமைச்சர்களைக் கொண்டிருந்த திமுக என்ன செய்தது? ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஒருமுறையாவது இதுபற்றி பேசியிருக்கிறாரா?

தில்லியில் நடந்த போராட்டம் விவசாயிகளுக்காக நடந்தது அல்ல, அது அரசியல் போராட்டம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.