மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அமைச்சர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் நீக்கம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டதை சட்ட விரோதமென அறிவிக்கக்கோரி மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

DIN

தமிழக அரசின் இணைய தளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டதை சட்ட விரோதமென அறிவிக்கக்கோரி மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அவர் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம்
ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகும். இந்த இணையதளத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை தமிழக அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்கள் மேம்படுத்தப்பட்டு இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்த விவரங்கள் ஜூலை22-ஆம் தேதி திடீரென நீக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து தகவல்களை அதிகாரப்பூர்வமாக அரசு இணைய தளம் வழங்குகிறது. ஆனால், எந்தக் காரணமும் தெரிவிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டது சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும்.
இந்த விவரங்கள் நீக்கப்பட்டதால், அந்தந்தத் தொகுதிக்குட்பட்ட அமைச்சர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க முடியாமல் உள்ளது. இந்த நடவடிக்கை, பொதுநலனுக்கு எதிரானது. ஆகையால், இணையதளத்தில் நீக்கம் செய்யப்பட்ட விவரங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு தலைமை வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.