சென்னை: டிடிவி தினகரன் அறிவிப்புகள் எதுவும் அதிமுக அம்மா அணியினரை கட்டுப்படுத்தாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களும், முக்கியத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை வழி நடத்தி வருகிறார்கள் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் பட்டியலில் டிடிவி தினகரன் பெயர் இல்லை. ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா பொதுச் செயலராக பொறுப்பேற்ற பிறகு கட்சிக்குள் இணைக்கப்பட்டார். தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்து அவரை துணைப் பொதுச் செயலராக நியமித்தது செல்லாது.
அதுமட்டுமில்லாமல், தொடர்ந்து 5 ஆண்டுகள் கழகத்தின் அடிப்படை உறுப்பினராகப் பதவி வகிக்காததால், அவர் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது என்று கழகச் சட்டம் சொல்கிறது.
இதற்கிடையே, கடந்த 4ம் தேதி அதிமுக அம்மா அணிக்கான பொறுப்பாரை நியமித்தார் டிடிவி தினகரன். ஆனால், தினகரன் அறிவித்த பொறுப்புகளை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும், அவரது நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணியில் சசிகலா மற்றும் தினகரனின் பொறுப்புகள் குறித்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேட்புமனுவில் தகவல்கள் மறைப்பு: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
திமுக தாரைவாா்த்ததை தவெக மீட்டுள்ளது: உயா் சிறப்பு மருத்துவ இட விவகாரத்தில் அமைச்சா் அருண்ராஜ் விளக்கம்

வெளிநாட்டு வேலை, உயா்கல்விக்கான சான்றொப்பம் பெற ஓஎம்சிஎல் அழைப்பு





