தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போயஸ் தோட்டத்தில் போலீஸ் குவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்டம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததன் எதிரொலியாக, வியாழக்கிழமை அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

News image
நினைவில்லமாக மாற்றறப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததைத் தொடர்ந்து, போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் முன் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.
Updated On :17 ஆகஸ்ட் 2017, 8:07 pm

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்டம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததன் எதிரொலியாக, வியாழக்கிழமை அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் நினைவில்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை அறிவித்தார். இதையடுத்து, ஜெயலலிதாவின் வீடு அமைந்துள்ள போயஸ் தோட்டப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.
முக்கியமாக, அந்தப் பகுதிக்குள் அமைந்துள்ள ஐந்து சாலைகளின் சந்திப்புகளிலும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அதேபோல், கூடுதலாக சுமார் 150 ஆயுதப்படை போலீஸார், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் இல்லம் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும், தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் அழகு மற்றும் காவல் துறை உயரதிகாரிகள், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஜெயலலிதா இருந்த வரை, போயஸ் தோட்டப் பகுதியில் சுமார் 250 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சுமார் 150 போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வந்தனர். இக்காலக்கட்டத்தில், போயஸ் தோட்டத்தில் போலீஸார் தேவையில்லாமல் குவிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததால், போலீஸார் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இரு மாதங்களுக்கு முன்பு திடீரென ஜெயலலிதா வீட்டுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன் பின்னர் தினமும் சுமார் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 50 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லம், நினைவில்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியான பின்னர், தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார், ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என சுமார் 200 போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா வீட்டின் பாதுகாப்பு கருதியும், முக்கியத்துவம் கருதியும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.