சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பதவி நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டது. அதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிச்சாமி அரசு கடந்த பிப்ரவரி மாதம் பதவியேற்றது முதல் இப்போது வரை தமிழகத்தில் ஏராளமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பழனிச்சாமி தலைமையிலான அரசை ஊழல் அரசு என்று விமர்சித்த பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், பழனிச்சாமி தலைமையிலான அணியில் இணைந்துள்ளனர். எனினும், பன்னீர்செல்வம் அணியில் அங்கம் வகித்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்களில் எத்தனை பேர் பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளனர் என்பது தெரியவில்லை.