‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

உலக அளவில் முதல் 10 மொழிகளில் தமிழைக் கொண்டு வர நடவடிக்கை

உலக அளவில் முதல் 10 மொழிகளில் தமிழைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்.

விழாவில் பேசுகிறார் அமைச்சர் க. பாண்டியராஜன்.

Published On :29 ஜனவரி 2024, 10:13 pm IST

உலக அளவில் முதல் 10 மொழிகளில் தமிழைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பண்பாட்டு மையத் தொடக்க விழாவில் அவர் பேசியது:
உலக மக்கள்தொகை 705 கோடி. உலக அளவில் 6,500 மொழிகள் பேசப்படுகின்றன. இதில், 2,000 மொழிகள் அழியும் நிலையில் உள்ளது என யுனெஸ்கோ அறிக்கை கூறுகிறது.
உலக அளவில் அதிக அளவில் பேசக்கூடிய மொழியாக சீனாவில் உள்ள மாண்டரின் மொழி உள்ளது. இம்மொழியை 111 கோடி பேர் பேசுகின்றனர். 2 ஆவது இடத்தில் உள்ள ஆங்கில மொழியை 105 கோடி பேர் பேசி வருகின்றனர். நம் தமிழ் மொழி 16 ஆவது இடத்தில் உள்ளது.
மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ் மொழியை உலக அளவில் முதல் 10 மொழிகளில் ஒன்றாக இடம்பெறச் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மொழியும் உலகமயமாகி வருகிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஆங்கில மொழியில் குறைந்தது 1,000 புது சொற்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழ் மொழியில் கடந்த 6 மாதங்களில் 450 புதிய சொற்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழிலும் புதிய சொற்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும். அதற்கான அதிகாரம் படைத்த அமைப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் அடுத்த மூன்று ஆண்டுகளில் முதல் 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இடம்பெற வேண்டும்.
மேலும், இணைவுக் கல்லூரிகள் கொண்ட பல கலைகளின் பல்கலைக்கழகமாக மாற வேண்டும் என்றார் பாண்டியராஜன்.
துணைவேந்தர் க. பாஸ்கரன் தலைமை வகித்தார். வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், பதிவாளர் ச. முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.